- காதல் வந்தால்...
- ஹார்மோன்களின் பருவ கிளர்ச்சியில் முகம் காட்டும் பருக்களை-பார்க்கும்போதெல்லாம் கைவிரல்களால் கற்பழிப்பாய்.
- உயிருக்குள் உயிர் புகுந்து ஊடுருவி உயிர் வாங்கும் உன்னத உண்மை உணர்வாய்.
- கனவிலும் கவிதையாய் உளறுவாய்.
- காகிதத்தில் அவள் பெயர் இட்டு அதையும் கவிதைஎன்பாய்.
- தலையணை பஞ்சுகளை கெஞ்சி கெஞ்சி கொஞ்சுவாய்.
- கோடை வெயிலும் உனக்கு கொடைக்கானல் மழையாகும்.
- குளிர்கால கம்பளிகள் குச்சி முள்ளாய் குத்தவரும்.
- இதுவரை கண்டு கொள்ளாத வானம் கோடிக்கண்கள் சிமிட்டி உன்னை மட்டுமே உற்றுப்பார்க்கும்.
- வெள்ளை நிலவு வண்ணம் பூசிக்கொண்டு வாய் முளைத்து உன்னோடு நிறுத்தாமல் பேசும்.
- தென்றல் கைபிடித்து உன்னோடு உலாவரும்.
- மாடியில் மலர்ந்துவிட்ட ஒற்றை ரோஜா உன்வீட்டு நந்தவனமாகும்.
- கல்லறையில் பூக்கும் கள்ளிச் செடியும்-உன் காதுக்குள் காதல் பேசும்.
- கான்க்ரீட் பாலங்களோ களத்துமேடாய் பொய்பேசும்.
- கருகி உருகும் தார்ச்சாலை ஒவ்வொன்றும் தனித்தீவாய் தண்ணிகாட்டும்.
- மூச்சு விட முடியாமல் முண்டி நிற்க்கும் மாநகரப் பேருந்து மயில்வாகனமாய் மாறிப்போகும்.
- ஓயாமல் பேசிய உதடுகள் ஊமையாகும்.
- வார்த்தைகளின் வழி தெரியாத விழிகள் காதல் அறிக்கையின் கடைசி பக்கம் வரை கண்சிமிட்டி கடகடவென ஒப்பிக்கும்.
- இதுவரை படிக்காத காதல் வாய்ப்பாடு இனி தலைகீழ் பாடமாகும்.
- இடி விழுந்து எரியாத இதயம்-அவள் இமையில் விழுந்து எரியும்.
- கனவு கழித்து வாழவும் கண்ணீர் குடித்துச் சாகவும் முடியும்.
Tuesday, May 18, 2010
காதல் வந்தால்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment